ரயிலை மறித்த 24 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட்ட மக்கள் விடுதலை கட்சியினர் 24 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட்ட மக்கள் விடுதலை கட்சியினர் 24 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அக்கட்சியின் தலைவர் முருகவேல் ராஜன் தலைமையில் 50 பேர், மதுரை ரயில் நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட நாகர்கோவில்-மும்பை விரைவு ரயிலை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுப்டடனர். இது தொடர்பாக முருகவேல் ராஜன் உள்பட 24 பேர் மீது ரயில்வே சட்ட பிரிவுகளில் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து, கைது செய்து மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.