ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை
திருமங்கலம் அருகே இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
திருமங்கலம் அருகே இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
திருமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார் (34). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி அங்காள ஈஸ்வரி (29). இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு பாண்டியன் ரயில்வே கேட் அருகே நின்று கொண்டிருந்த அங்காள ஈஸ்வரி திருநெல்வேலியில் இருந்து ஜம்முதாவி சென்ற விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.