பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் 16 பவுன் நகை திருட்டு
மதுரையில் பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ.52 ஆயிரம் ரொக்கத்தை அடையாளம்
மதுரையில் பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ.52 ஆயிரம் ரொக்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை குலமங்கலம் அருகே உள்ள கோசாகுளம் என்.பி.நகரைச் சேர்ந்தவர் ஜோதிநாதன்(55). பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 16 பவுன் நகை, ரூ. 52 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக ஜோதிநாதன் அளித்த புகாரின்பேரில் கூடல்புதூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.