முகப்பு
மதுரை

சிறுமிக்கு பாலியல் தொல்லை:  முன்னாள் எஸ்.ஐ கைது

மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாரின்பேரில் முன்னாள் சார்பு ஆய்வாளரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 23 ஜூலை 2018, 7:09 am IST
பகிர்:

மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாரின்பேரில் முன்னாள் சார்பு ஆய்வாளரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மதுரை ஆத்திகுளம் குறிஞ்சிநகர் பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் திரவியம் (69). காவல்துறையில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுமியின் தாய் அளித்தப்புகாரின் பேரில் தல்லாகுளம் மகளிர் போலீஸார் திரவியத்திடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திரவியம் மீது குழந்தைகள் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments