500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!
மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை தமிழக அரசு ரத்து செய்தது பற்றி...
திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை தமிழ்நாடு அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்த பிறகு, கடந்த ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல டெண்டர்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட மல்டி லெவல் கார் பார்கிங் போன்ற சில டெண்டர்களை ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகரங்களில் இயக்குவதற்காக 500 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் மின்சார பேருந்துகள் வாங்க கோரப்பட்ட டெண்டரால் நிதி இழப்பு ஏற்படும் என்பதால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஜூன் 18 ஆம் தேதி டெண்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஜெர்மன் வங்கியும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் 625 மின்சார பேருந்துகளை தனியார் மூலம் இயக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
The Tamil Nadu government has cancelled the tender for the procurement of 500 electric buses!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.