தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவது தொடர்பான டெண்டரை தமிழக அரசு ரத்து செய்தது பற்றி...
தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவது தொடர்பான டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை தவிர, 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியார் பங்களிப்புடன் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு சமீபத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரி டெண்டர் வெளியிட்டது.
இந்த நடவடிக்கையை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் தனியார்மயமாக்குவதை கைவிடக் கோரி முதல்வர் விஜய்யை வலியுறுத்தியிருந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
Tender for privatizing sanitation work cancelled!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.