மருத்துவமனை காவலாளி மர்மச் சாவு
மதுரையில் தனியார் மருத்துவமனை காவலாளி கிணற்றில் மர்மமாக இறந்து கிடந்ததாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் தனியார் மருத்துவமனை காவலாளி கிணற்றில் மர்மமாக இறந்து கிடந்ததாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை ஆண்டாள் கொட்டாரத்தை சேர்ந்தவர் மலைச்சாமி 65). இவர் ராமநாதபுரம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வேலைக்குச்சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் மலைச்சாமி குறித்த தகவல் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர் மனைவி இருளாயி அளித்தப் புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கிணற்றில் மலைச்சாமியின் சடலம் மிதந்தது. தகவலின்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச்சென்று மலைச்சாமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் மலைச்சாமி கொலை செய்யப்பட்டாரா? என்பது தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.