வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கட்டும் மதுரை ஆதீனம் தீபாவளி வாழ்த்து
வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி நிலைக்கட்டும் என மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி நிலைக்கட்டும் என மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மதுரை ஆதீனம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: துலா மாதத்தில்தான் தீபாவளிப் பண்டிகை வருகிறது. துலாம் என்றால் தராசு என்பது பொருள்.
வாழ்க்கையில் லாப, நஷ்டம், இன்பம், துன்பம் ஆகியவற்றை சமமாகக் கருத வேண்டும். அப்படிக் கருதுவோர் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி நிலைக்கும். தீப ஒளி போல இன்பம் மிளிரும்.
ஒருவரை ஒருவர் மதித்துப் பழகும் பண்பு வேண்டும். மூத்தவர்களை மதித்துப் போற்றும் பண்பு வேண்டும்.
துன்பத்தில் இருப்போருக்கு ஆதரவாக இருந்து அவர்கள் இன்பத்தில் சிரிக்க வழிகாட்ட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.