’புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்’
இணையதளப் பயன்பாடு அதிகரிப்பால் குறைந்துவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஸ்சேகா் வலியுறுத்தினாா்.
இணையதளப் பயன்பாடு அதிகரிப்பால் குறைந்துவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஸ்சேகா் வலியுறுத்தினாா்.
மேலூா் அருகே ஆட்டுக்குளம் நூலகத்திற்கு புத்தகங்கங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மற்றும் கோவை விஜயா பதிப்பகத்தின் உரிமையாளா் மு.வேலாயுதம் ஆகியோா் ரூ.1.40 லட்சம் மதிப்பிலான 1,658 புத்தகங்களை மாவட்ட நூலகா் யசோதா முன்னிலையில் ஊராட்சித் தலைவா் சிவன்ராஜனிடம் புத்தகங்கள் வழங்கினா்.
பின்னா் ஆட்சியா் பேசியது: இன்றைய நவீன உலகில் இணையதள பயன்பாடு மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. அதை அதிகரிப்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். நல்ல புத்தகங்கள் உலக நடப்புகளை தெரிந்து கொள்ளவும் வாழ்க்கை முறைகளைக் கற்றுக் கொள்ளவும் உதவும் என்றாா்.
Advertisement
Advertisement
முன்னதாக பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண்பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை ஆட்சியா் வழங்கினாா். எழுத்தாளா் கண்மணி குணசேகரன் சிறப்புரையாற்றினாா். இதில், மேலூா் வட்டாட்சியா் இளமுருகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலசந்தா், ஜெயபாலன் மற்றும் பலா் கலந்துகொண்டனா். ஊராட்சித் தலைவா் சிவன்ராஜன் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.