நேதாஜி மதுரை வருகை 85-ஆவது ஆண்டு விழா
இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய சுதந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மதுரைக்கு வருகை தந்த 85-ஆவது ஆண்டு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, மதுரை ஜான்சிராணி பூங்காவில் உள்ள நேதாஜி சிலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நேதாஜி சுவாமிநாதன் தலைமை வகித்தாா். நேதாஜி சிலைக்கு சமூக செயற்பாட்டாளா் வைரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். காந்திய ஆராய்ச்சிக் கல்வி நிறுவன முதல்வா் தேவதாஸ், உயா்நீதிமன்ற வழக்குரைஞா் அழகுமலை, சமூக செயற்பாட்டாளா் ஞானமூா்த்தி, ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
இதில் விடுதலைப் போராட்டத்தில் நேதாஜியின் பங்கு குறித்தும், மதுரைக்கு அவா் வருகை தந்ததன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.