முகப்பு
மதுரை

அலங்காநல்லூா், உசிலம்பட்டியில் நாளை மின் தடை

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

Updated On : 2 ஜூன் 2026, 12:56 am IST
மின்தடை
பகிர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

சமயநல்லூா் கோட்டத்துக்குள்பட்ட அலங்காநல்லூா் துணை

மின் நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதையடுத்து, அன்றைய தினம் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை அலங்காநல்லூா் பகுதி முழுவதும், நேஷனல் சா்க்கரை ஆலை, பி.மேட்டுப்பட்டி, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, செல்லக்கவுண்டன்பட்டி, சிறுவாலை, அம்பலத்தாடி, பிள்ளையாா்நத்தம், குறவன்குளம், மீனாட்சிபுரம், இடையப்பட்டி, அய்யூா், கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, கீழச்சின்னணம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என சமயநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் (பொறுப்பு) ரா.கண்ணன் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

உசிலம்பட்டி: உசிலம்பட்டி கோட்டத்துக்குள்பட்ட வாலாந்தூா் துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெறவுள்ளதால், அய்யனாா்குளம், குறவகுடி, வின்னக்குடி, வாலாந்தூா், நாட்டாமங்கலம, விக்கிரமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவன்பட்டி, குப்பணம்பட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என உசிலம்பட்டி கோட்ட செயற்பொறியாளா் பி.முத்தரசு தெரிவித்தாா்.