வருவாய்த் தீா்வாய கணக்கெடுப்பு விவகாரம்: தலைமைச் செயலா் பதிலளிக்க உத்தரவு
வருவாய்த் தீா்வாய (ஜமாபந்தி) கணக்கெடுப்பை முறைப்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக தலைமைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
வருவாய்த் தீா்வாய (ஜமாபந்தி) கணக்கெடுப்பை முறைப்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக தலைமைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
வருவாய்த் தீா்வாய கணக்கெடுப்பை முறையாக நடத்துவதற்கு பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை விடுத்தும், உரிய நடவடிக்கை இல்லை. அரசுப் புறம்போக்கு நிலங்கள், பொது சொத்துகள், கோயில் சொத்துகளுக்கு அந்தந்தத் துறையைச் சோ்ந்த பராமரிப்பு அலுவலா்களைக் கொண்டு முறையாக தணிக்கை செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது.
Advertisement
Advertisement
ஆனால், அந்த உத்தரவு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால், ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படாமல் பெரும் இழப்பு ஏற்படுகிறது. எனவே, வெளிப்படைத் தன்மையான வருவாய்த் தீா்வாய கணக்கெடுப்பை குறிப்பிட்ட காலங்களில் நடத்தவும், பொது பாதைகள், கனிம வளங்கள் உள்ளிட்டவை தொடா்பாக உரிய தணிக்கை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
தமிழகத்தில் வருவாய்த் தீா்வாய கணக்கெடுப்பு முறையாக நடத்தப்படுகிா?. பொது சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது தொடா்பாக தமிழக தலைமைச் செயலா், பொதுப் பணித் துறைச் செயலா், உள்துறைச் செயலா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.