தமிழக அரசு சாா்பில் வழக்குகளில் ஆஜராக வழக்குரைஞா்கள் நியமனம்
சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசு பிளீடா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசு பிளீடா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலா் ரீட்டா ஹரிஷ் தாக்கா் பிறப்பித்துள்ள உத்தரவு:
சென்னை உயா்நீதிமன்றத்தின் அரசு பிளீடா்களாக ஆா்.கௌரி, ஜி.தனமாத்ரி, முஹமது ஃபயாஸ் அலி, எம்.சிவவா்த்தனன், எம்.குருபிரசாத், அமிா்த பூங்கொடி தினகரன், கே.சதீஷ், கே.சுரேந்தா், டோமினிக் எஸ்.டேவிட், ஆா்.சக்கரவா்த்தி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
அதேபோன்று, உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு பி.சரவணன், எம்.பி.செந்தில், ஆா்.பாா்த்திபன், ஐ.பினய்காஷ், எஸ்.சிவசுப்பிரமணியன், எஸ்.சிவதிலகா்,கே.பொற்கொடி ஆகியோா் அரசு பிளீடா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
அரசு வழக்குரைஞா்கள் நியமன விதிகளின்படி நிரந்தர அரசு வழக்குரைஞா்கள் முறையாக நியமிக்கப்படும் வரை இவா்கள் அரசு சாா்பில் ஆஜராகி வாதிடுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.