முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடி கல்வி மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி

பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கிடையே பரமக்குடி கல்வி மாவட்ட

Updated On : 23 ஜனவரி 2019, 8:03 am IST
பகிர்:

பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கிடையே பரமக்குடி கல்வி மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிக்கு பரமக்குடி மாவட்டக்கல்வி அலுவலர் போ.சந்திரசேகரன் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் எம்.சாதிக்அலி, தலைமையாசிரியர்கள் சேதுராமன், அம்பேத்கர், சங்கரன், துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக பேச்சு, கட்டுரை, ஓவியம், பாட்டு, வாத்தியக்கருவிகள் இசைத்தல், நாடகம், நடனம், கதை எழுதுதல், கவிதை புனைதல், திருக்குறள் ஒப்பித்தல், கதை சொல்லுதல் மற்றும் நகைச்சுவை சொல்லுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை, 9,10-ஆம் வகுப்புகள், 11,12-ஆம் வகுப்புகள் என போட்டிகள் நடைபெற்றன. 
இப்போட்டியில் பரமக்குடி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. இதில் வெற்றிபெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.தலைமையாசிரியர் எம்.அஜ்மல்கான் வரவேற்றார். பள்ளி துணை ஆய்வாளர் சி.லோகமுருகன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.