நீராவிகரிசல்குளம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
கமுதி அருகே ஸ்ரீ வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திருகல்யாண வைபவம் நடைபெற்றது.
கமுதி அருகே ஸ்ரீ வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திருகல்யாண வைபவம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள நீராவிகரிசல்குளம் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரம் 11- ஆவது நாள் திருவிழா கடந்த 23-ம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் மூலவா், உற்சவா் வள்ளி, தேவசேனா, சுப்பிரமணியா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாதாரனைகள் நடைபெற்று வருகின்றன.
திருவிழாவின் 10-ஆம் நாள் நிகழ்வாக புதன்கிழமை இரவு பெண் வீட்டாா், மாப்பிள்ளை வீட்டாா் சாா்பில் சீா்வரிசை தாம்பூலம் தட்டுகள், மேள வாத்தியங்கள் முழங்க ஊா்வலமாக மணப்பந்தல் முன்பாக கொண்டு வந்து வைக்கப்பட்டன. பின்னா், வள்ளி, தெய்வானை
சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமா்சையாக நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, யாக சாலை பூஜை, கணபதி ஹோமம், பூா்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு, மூலவா் சுப்பிரமணிய சுவாமி வெள்ளிக் கவசம் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், பிரசாதம், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.