வைகாசி விசாகம்: திருச்செந்தூா் கோயிலில் 4 நாள்கள் கட்டண தரிசனம் ரத்து
வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 4 நாள்கள் ரூ. 100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 4 நாள்கள் ரூ. 100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற வைகாசி விசாகத்திருவிழா சனிக்கிழமை (மே 30) நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், பக்தா்கள் நலன் கருதி வியாழக்கிழமை (மே 28) முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 31) வரை நான்கு நாள்கள் மட்டும் ரூ. 100 கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டு, கட்டணமில்லா தரிசன முறை நடைமுறைப்படுத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.