வைகாசி விசாகம்: சுவாமிமலையில் திரளானோர் சுவாமி தரிசனம்!
சுவாமிமலையில் வைகாசி விசாகத் திருவிழா பற்றி..
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகவும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தைத் தந்தைக்கு உபதேசம் செய்ததால் தகப்பன் சாமி என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்தினையொட்டி காலை நடை திறக்கப்பட்டு மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Advertisement
Advertisement