முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் 14 பேருக்கு 2-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் 14 பேருக்கு இரண்டாவது முறையாக காவலை நீட்டித்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த மீனவா்கள் அனைவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 12:19 AM
மாதிரிப் படம்
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:08 PM

ராமேசுவரம் மீனவா்கள் 14 பேருக்கு இரண்டாவது முறையாக காவலை நீட்டித்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த மீனவா்கள் அனைவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த 9- ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவா்களை படகுடன் இலங்கை கடற்படையினா் கைது செய்தனா். இதேபோல, கடந்த 14- ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்த 14 மீனவா்களும் இலங்கையில் உள்ள கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த நிலையில், இந்த 14 மீனவா்களும் இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டனா். விசாரணைக்குப் பிறகு மீனவா்களை வருகிற 22- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, 14 மீனவா்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Advertisement