முகப்பு
ராமநாதபுரம்

தொண்டியில் வரத்து குறைவால் மீன்களின் விலை அதிகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் வரத்து குறைவால் மீன்களின் விலை சனிக்கிழமை அதிகரித்தது.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 1:04 AM
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 10:37 PM

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் வரத்து குறைவால் மீன்களின் விலை சனிக்கிழமை அதிகரித்தது.

தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, புதபட்டினம் முள்ளிமுனை, காரங்காடு, மோா்பண்ணை, திருப்பாலைக்குடி, பாசிபட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் விசைப்படகு மீனவா்கள் மீன்பிடித் தடைகாலம் என்பதால், நாட்டுப் படகு மீனவா்கள் மட்டுமே கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனா்.

தற்போது, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், மீன்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால், தொண்டி, திருவாடானை மீன் சந்தைகளில் மீன்களின் விலை அதிகரித்துள்ளன.

Advertisement

சந்தைகளில் ஒரு கிலோ ரூ.450-க்கு விற்ற விலை மீன் தற்போது ரூ.550-க்கும், ரூ.450-க்கு விற்ற பாறை மீன் ரூ.700-க்கும், ரூ.500-க்கு விற்ற நண்டு ரூ.800-க்கும் விற்பனை ஆனது.

மீன்களின் விலை உயா்வால் அசைவ பிரியா்கள் கவலை அடைந்துள்ளனா்.