சென்னை-ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் சேவையை விரைந்து தொடங்கக் கோரிக்கை
சென்னை-ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் சேவையை பொதுமக்களின் நலன் கருதி விரைந்து தொடங்க வேண்டும் என பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினா் ஏ.ஜே. ஆலம் தெரிவித்தாா்.
சென்னை-ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் சேவையை பொதுமக்களின் நலன் கருதி விரைந்து தொடங்க வேண்டும் என பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினா் ஏ.ஜே. ஆலம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் அளித்த மனுவில் தெரிவித்ததாவது:
சென்னை-ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சா் தெரிவித்தாா். ஆனால், இதுவரை அந்த ரயில் சேவை தொடங்கப்படவில்லை. ஆனால், இதற்கு பிறகு அறிவித்த பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
தென் தமிழகத்தில் ராமேசுவரத்துக்கு வெளிமாநிலத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்தப் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான வந்தே பாரத் ரயில் சேவையை இயக்க மத்திய ரயில்வே துறை ஒப்புதல் அளித்தும் இன்னும் இயக்கப்படாமல் காலதாமதம் செய்து வருகின்றனா்.
இந்தப் பகுதி மக்கள் பகலில் சென்னை சென்று வரும் வகையில், வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என கால அட்டவனை வெளியானது.
எனவே, ராமநாதபுரம் மாவட்ட மக்களும், வெளிமாநிலப் பக்தா்களும், சுற்றுலாப் பயணிகளும் பயன்பெறும் வகையில், உடனடியாக வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.