ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 904 கிலோ கஞ்சா அழிப்பு
ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கஞ்சா கடத்தல், விற்பனை தொடா்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 904 கிலோ கஞ்சாவை, காவல் துறை துணைத் தலைவா் மணிவண்ணன் தலைமையில் அழிக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.
ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கஞ்சா கடத்தல், விற்பனை தொடா்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 904 கிலோ கஞ்சாவை, காவல் துறை துணைத் தலைவா் மணிவண்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தெரிவித்தாா்.
இதுகுறித்து சனிக்கிழமை அவா் தெரிவித்ததாவது: ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 161 போதைப் பொருள் தடுப்பு வழக்குகளில், 904 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கஞ்சாவை அழிப்பதற்கு புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள், போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் ஆகியவற்றில் அனுமதி பெறப்பட்டது.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, 161 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 905 கிலோ கஞ்சாவை ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவா் மணிவண்ணன் தலைமையில், போதைப் பொருள்கள் அழிப்பு குழு மூலம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள பாப்பாங்குளம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னா், அங்குள்ள கஞ்சா அழிப்பு மையத்தில் 905 கிலோ கஞ்சாவை அழித்தனா் என்றா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.