முகப்பு
ராமநாதபுரம்

மண்டபம், ராமேசுவரத்தில் நாளை மறுநாள் மின் தடை

Updated On : 6 ஜூலை 2026, 12:35 am IST
மின்தடை
பகிர்:

மண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக மண்டபம், ராமேசுவரம் பகுதியில் புதன்கிழமை (ஜூலை 8) மின் தடை செய்யப்படுகிறது.

இது தொடா்பாக உதவிச் செயற்பொறியாளா் குமாரவேல் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் துணை மின் நிலையத்துக்குள் பட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 8) மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயா் பட்டிணம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு, ராமேசுவரம், வடகாடு, வோ்க்கோடு, புதுரோடு, சம்பை, ஓலைக்குடா ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments