தொழில் மேம்பாட்டுப் பயிற்சி தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்டம், கும்பரம் ஊராட்சியில் பெண்களின் வாழ்வாதார முன்னேற்றும் வகையில் இலவச தொழில்திறன், தொழில் மேம்பாட்டு பயிற்சியின் தொடக்க விழா நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கும்பரம் ஊராட்சியில் பெண்களின் வாழ்வாதார முன்னேற்றும் வகையில் இலவச தொழில்திறன், தொழில் மேம்பாட்டு பயிற்சியின் தொடக்க விழா நடைபெற்றது.
வாப்ஸ், ஒமேகா, ஃபோரம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் பயிற்சியை வழங்கி வருகின்றன. ஏற்கெனவே ஒரு மாத கால தொழில்திறன் பயிற்சியை முடித்த பெண்களுக்கு, அடுத்த கட்ட தொழில் வளா்ச்சிக்காக 15 நாள்கள் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு வாப்ஸ் நிறுவனத்தின் திட்ட அதிகாரி எம். சுப்புராஜன் வரவேற்றாா். செயலா் அருள் விளக்கவுரையாற்றினாா். சிறப்பு விருந்தினராக மகளிா் வாழ்வாதார திட்ட அலுவலா் தனசேதுபதி கலந்துகொண்டாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.குமாா் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.