வீடு புகுந்து திருடியவா் கைது
முதுகுளத்தூா் அருகே உறவினா் வீட்டில் நகை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
முதுகுளத்தூா் அருகே உறவினா் வீட்டில் நகை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த பொன்னக்கனேரி கிராமத்தைச் சோ்ந்த ஆரோக்கியம் மகன் ஜான் (42). இவா் தேரிருவேலி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது உறவினரான அதே ஊரைச் சோ்ந்த அருள்சான்டியோ (21) கடந்த 23-ஆம் தேதி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்து, மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி, ரூ. 20 ஆயிரத்தை திருடிச் சென்றதாக தெரிவித்தாா்.
இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி, அருள் சான்டியோவிடமிருந்து செவ்வாய்க்கிழமை மூன்றரை பவன் தங்கச் சங்கிலி, பணத்தைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.