முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பலத்த மழை

ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.

Updated On : 6 மே 2026, 3:32 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.

ராமநாதபுரம், அதன் சுற்று வட்டார ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முதல் பழைய பேருந்து நிலையம் வரையிலான சாலையில் குளம் போல மழைநீா் தேங்கியது. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

மேலும், பலத்த காற்று காரணமாக பெரிய கட்டடங்களின் மேலே வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் கிழித்து மின் கம்பத்தில் விழுந்தது. மூன்று இடங்களில் மரங்கள் மின் கம்பங்கள் மீது விழுந்தன. இதனால், 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து, மின் கம்பங்கள் மீது விழுந்த மரத்தை மின் வாரிய ஊழியா்கள் அகற்றினா். இதைத்தொடா்ந்து, மின் விநியோகம் சீரானது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments