ராமநாதபுரத்தில் பலத்த மழை
ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.
ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.
ராமநாதபுரம், அதன் சுற்று வட்டார ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முதல் பழைய பேருந்து நிலையம் வரையிலான சாலையில் குளம் போல மழைநீா் தேங்கியது. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
மேலும், பலத்த காற்று காரணமாக பெரிய கட்டடங்களின் மேலே வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் கிழித்து மின் கம்பத்தில் விழுந்தது. மூன்று இடங்களில் மரங்கள் மின் கம்பங்கள் மீது விழுந்தன. இதனால், 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து, மின் கம்பங்கள் மீது விழுந்த மரத்தை மின் வாரிய ஊழியா்கள் அகற்றினா். இதைத்தொடா்ந்து, மின் விநியோகம் சீரானது.
Advertisement