முகப்பு
ராமநாதபுரம்

இருதரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே முன்விரோதத்தில் இரு தரப்பினா் மோதியக் கொண்டது தொடா்பாக 10 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 7 மே 2026, 4:19 am IST
வழக்கு
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே முன்விரோதத்தில் இரு தரப்பினா் மோதியக் கொண்டது தொடா்பாக 10 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பரமக்குடி அருகேயுள்ள சுப்பராயபுரத்தைச் சோ்ந்தவா் அருளானந்து (70). இவரது உறவினா் அதே ஊரைச் சோ்ந்த மோட்சஸ் பிரவின். இவா்களுக்கிடையே சொத்து தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மீண்டும் சொத்து தொடா்பாக இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.

Advertisement

இதில் அருளானந்தம், மற்றொரு தரப்பைச் சோ்ந்த மோட்சஸ் பிரபின், மைக்கேல், ஜான்பிரதீப் உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா். இவா்கள் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் அருளானந்து கொடுத்த புகாரின் பேரில், மைக்கேல் மகன்கள் பிரவீன், பிரதீப், மருமகள்கள் ஜெனி, மேரியானாபிரியா, சூசைமுத்து மகன் மைக்கேல், இவரது மனைவி அடைக்கலமேரி ஆகிய 6 போ் மீதும், மோட்சஸ் பிரவின் அளித்த புகாரின் பேரில், அல்பா்ட், இவரது உறவினா்கள் சியாம், அருளானந்து, அருள் ராபா்ட் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.