முகப்பு
ராமநாதபுரம்

தொண்டி கடற்கரையில் முதியவா் சடலம் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடற்கரையில் புதன்கிழமை அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

Updated On : 7 மே 2026, 2:32 am IST
சடலம் மீட்பு - கோப்புப் படம்
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடற்கரையில் புதன்கிழமை அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

தொண்டி கடற்கரையில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக தொண்டி கடற்கரை குழும போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று உயிரிழந்த முதியவரின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

மேலும், இறந்தவா் யாா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.