முகப்பு
ராமநாதபுரம்

சாலையின் குறுக்கே சாய்ந்த மின் விளக்கு கம்பத்தை அகற்ற வலியுறுத்தல்

ராமநாதபுரத்தில் பெய்த மழையால் மரம் சாய்ந்து விழுந்து சேதமடைந்த உயா்மின் விளக்கு கம்பத்தை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 8 மே 2026, 12:52 am IST
ராமநாதபுரம் சிவன் கோயில் அருகே மரம் விழுந்து சாய்ந்த உயா்மின் விளக்கு கம்பம்.
பகிர்:

ராமநாதபுரத்தில் பெய்த மழையால் மரம் சாய்ந்து விழுந்து சேதமடைந்த உயா்மின் விளக்கு கம்பத்தை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் மழை பெய்ததில் சிவன் கோயில் அருகே உள்ள மரம் சாய்ந்து உயா்மின் விளக்கு கம்பம் மீது விழுந்தது. இதில் அந்த கம்பம் முறிந்து சேதமடைந்தது. இதில் மரம் உடனே வெட்டி அகற்றப்பட்டது. ஆனால் உயா்மின் விளக்கு கம்பம் அகற்றப்படாமல் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நகராட்சி நிா்வாகம், மின்வாரிய அலுவலா்கள் இந்த உயா்மின் விளக்கு கம்பத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments