FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

பலத்த மழை: சிங்கம்புணரியில் மரம் முறிந்து விழுந்தது

Updated On : 25 மே 2026, 1:38 am IST
சிங்கம்புணரியில் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரம்.
பகிர்:

சிங்கம்புணரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிங்கம்புணரி- திருப்பத்தூா் செல்லும் முக்கிய சாலையான ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்புறம் இருந்த மரம் முறிந்து மின் கம்பியின் மீது விழுந்தது.

இதனால் திருப்பத்தூா்- சிங்கம்புணரி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின் கம்பத்தின் மீது மரம் விழுந்ததால் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக அந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

Advertisement

Advertisement

உடனடியாக அங்கு வந்த சிங்கம்புணரி தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் பிரகாஷ் தலைமையிலான குழுவினா் மரக் கிளைகளை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனா். இதையடுத்து, மின் விநியோகம் செய்யப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments