முகப்பு
சிவகங்கை

சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றக் கோரிக்கை

சிங்கம்புணரியில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற மின் வாரிய ஊழியா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 14 மே 2026, 5:15 am IST
சிங்கம்புணரியில் சேதமடைந்து காணப்படும் மின் கம்பம்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற மின் வாரிய ஊழியா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சிங்கம்புணரி வடக்கு வேளாளா் தெரு, மீனாட்சி நகரில் உள்ள மின் கம்பம் பல மாதங்களாக சேதமடைந்து காணப்படுகிறது. இந்த மின் கம்பத்தைச் சுற்றி குடியிருப்புகள் காணப்படுகின்றன. தற்போது, காற்றுடன் மழை பெய்து வருவதால், இந்த மின் கம்பம் குடியிருப்பின் மேல் சாயந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, மின்வாரிய ஊழியா்கள் உடனடியாக சேதமடைந்த இந்த மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Advertisement