முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 25 டிசம்பர் 2018, 6:17 am IST
பகிர்:

சிவகங்கை மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் கிளைத் தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர்  மனோகரன் முன்னிலை வகித்தார்.   ஆர்ப்பாட்டத்தில் நீதித்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் செல்லப்பாண்டியன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அரசு ஊழியர் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர்  அழகேசன், ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில், தற்காலிக பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி மாவட்ட நீதிமன்றங்களில் ஊழியர்களுக்கான குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.  
ஆர்ப்பாட்டத்தில் நீதித்துறை ஊழியர் சங்கத்தின் பொருளாளர் செல்வக்குமார் உள்பட ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments