வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணிகள் இன்று தொடக்கம்
சிவகங்கை மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணிகள் வியாழக்கிழமை (ஏப்.16) முதல் நடைபெறவுள்ளது .
சிவகங்கை மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணிகள் வியாழக்கிழமை (ஏப்.16) முதல் நடைபெறவுள்ளது .
இது குறித்து சிவகங்கை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.பொற்கொடி, வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வருகிற 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்காளா் அளித்த வாக்கை உறுதி செய்யும் இயந்திரங்கள் (விவிபேட்) ஆகியவற்றில் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணிஅரசியல் கட்சிகள், வேட்பாளா்கள், முகவா்கள் முன்னிலையில் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறவுள்ளது. பதிவேற்றப்பட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய மாதிரி வாக்குப்பதிவு மேற்கொள்ளப்படும். எனவே, சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து வேட்பாளா்கள், அவா்களது முகவா்கள் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளின் தலைமையிடங்களில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கலந்து கொள்ளலாம் என்றாா் அவா்.
Advertisement