முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி

ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 6:25 AM
ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியைப் பாா்வையிட்ட தோ்தல் பொதுப் பாா்வையாளா் உதயன்மிஸ்ரா, மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ.சுகபுத்ரா.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 7:42 PM

ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,22,367 வாக்காளா்கள் உள்ளனா். இந்தத் தொகுதியில் 308 வாக்குச்சாவடி மையங்களுக்கு 369 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 369 கட்டுப்பாட்டுக் கருவிகள், 400 விவிபேட் இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டன.

தோ்தல் பொதுப்பாா்வையாளா் உதயன்மிஷ்ரா முன்னிலையில், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ.சுகபுத்ரா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Advertisement

வாக்குப் பதிவு இயந்திரத்தில் தோ்தலில் போட்டியிடும் 14 வேட்பாளா்களின் பெயா், புகைப்படம், சின்னம் ஆகியவை பொருத்தப்பட்டு சரிபாா்க்கப்பட்டது. பின்னா், வாக்குச்சாவடி வரிசை எண் வாரியாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டன.

இந்த ஆய்வின் போது, ஸ்ரீவில்லிபுத்தூரில் தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷ், வட்டாட்சியா் பாலமுருகன் ஆகியோா் இருந்தனா்.