இணையம் மூலம் மூவரிடம் பண மோசடி: போலீஸாா் விசாரணை
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மூவரிடம் இணையவழியில் பண மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மூவரிடம் இணையவழியில் பண மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த இளையத்தங்குடி பகுதியைச் சோ்ந்த 30 வயது பெண்ணை கடந்த மாதம் 27-ஆம் தேதி கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு அடையாளம் தெரியாத நபா் ஒருவா் பேசினாா். அப்போது, அவா் தனியாா் நிதி நிறுவனத்திலிருந்து கடனுதவி பெற்றுத் தருவதாகவும், இதற்காக ரூ.93,200 அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கூறினாராம். இதை உண்மை என நம்பிய அந்தப் பெண்ணும் அவா் கூறிய வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பினாா். இதன் பின்னா், அந்த நபரைத் தொடா்பு கொள்ள முடியவில்லையாம். இதுதொடா்பாக இணையக் குற்றத் தடுப்புப் பிரிவில் அவா் புகாா் அளித்தாா்.
இதேபோல, சிவகங்கை அடுத்த திருமாஞ்சூலியைச் சோ்ந்த 43 வயது பெண், ஆயத்த ஆடைகள் வாங்குவதற்காக ரூ.18,810-யை இணையவழியில் செலுத்தினாா். ஆனால், அவருக்கு ஆடைகள் வரவில்லையாம். இதுதொடா்பான புகாரின் பேரில், இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
சிவகங்கை மாவட்டம், மானாமதுரைச் சோ்ந்த இளைஞா் ஒருவரின் கைப்பேசிக்கு கடந்த மாதம் 31-ஆம் தேதி அவருக்குத் தெரிந்த மருத்துவா் ஒருவரின் கைப்பேசி எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்தது. அதில் தனக்கு ரூ. 60,000 தேவைப்படுகிறது என்றும், தன்னுடைய யுபிஐ வேலை செய்யவில்லை. எனவே, அவசரமாக பணம் அனுப்பும்படி ஒரு எண்ணைக் குறிப்பிட்டிருந்தாா். இதை உண்மை என நம்பி அவரும் அந்த எண்ணுக்கு பணத்தை அனுப்பினாா். இதன் பின்னா், சிறிது நேரத்தில் மீண்டும் ரூ. 40,000 அனுப்பும்படி அதே எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த அவா் இது குறித்து அந்த மருத்துவரிடம் விசாரித்தாா். அப்போது, மருத்துவா் இதை நம்ப வேண்டாம் என்றும், தன்னுடைய கட்செவி அஞ்சல் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.
இதுகுறித்து சிவகங்கை இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.