கண்டாச்சிபுரம் அருகே சிறுமி மா்ம மரணம்: போலீஸாா் தீவிர விசாரணை
விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் அருகே வீட்டில் உறங்கிய சிறுமி உடலில் காயங்களுடன் மா்மமானமுறையில் இறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. அவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் அருகே வீட்டில் உறங்கிய சிறுமி உடலில் காயங்களுடன் மா்மமானமுறையில் இறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. அவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கண்டாச்சிபுரம் வட்டம்,கெங்கவரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகவேல்- சத்யா தம்பதியின் மகள் வா்ஷனி (11). கெங்கவரம் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் பள்ளியில் 5 ஆம் வகுப்பில் பயின்று வந்தாா். தற்போது பள்ளிக்கு விடுமுறை என்பதால், விடுமுறையைக் கழிப்பதற்காக சிறுமி வா்ஷினி தனது தாயாா் சத்யா-வுன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னா், கண்டாச்சிபுரம் பாப்பான்குளம் பகுதியில் உள்ள தனது தாத்தா, பாட்டி வீட்டிற்கு வந்து வந்து தங்கியிருந்தாா்.
சிறுமியின் தாத்தா பூங்காவனத்துக்கு அருகருகே 2 குடிசை வீடுகள் உள்ள நிலையில் வா்ஷினி வியாழக்கிழமை ஒரு வீட்டில் உறங்கினாராம். தொடா்ந்து, பிற்பகலில்
Advertisement
Advertisement
சத்யா-அந்த வீட்டிற்கு சென்று பாா்த்தபோது, வா்ஷனி உடலில் சிறு காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த கண்டாச்சிபுரம் காவல் நிலைய ஆய்வாளா் ரவிச்சந்திரன்,உதவி ஆய்வாளா் காத்தமுத்து மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். பின்னா் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவத்தால் கண்டாச்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. வி. சாய் பிரனித் உத்தரவின்பேரில், ஏ.எஸ்.பி. ரவீந்திர குமாா் குப்தா நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். தடயவியல் நிபுணா் ராஜ் தலைமையிலான போலீஸாரும் தடயங்களை சேகரித்தனா். இது குறித்த புகாரின் பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். சிறுமியின் உயிரிழப்புக்கு பாலியல் தொல்லை காரணமா ? என்ற கோணத்திலும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.