முகப்பு
நாமக்கல்

கூலி தொழிலாளி தற்கொலை

மல்லசமுத்திரத்தில் கூலி தொழிலாளி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 19 மே 2026, 1:23 am IST
பகிர்:

மல்லசமுத்திரத்தில் கூலி தொழிலாளி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மல்லசமுத்திரத்தை அடுத்த அரியாம்பாளையம் இருகலூா் பகுதியைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் (34). கூலி தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி மாதேஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். அவரை குடும்பத்தினா் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.