முகப்பு
சிவகங்கை

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயிலில் பூ பல்லாக்கு விழா

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயிலில் பூ பல்லாக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்

Updated On : 4 ஜூன் 2026, 3:57 am IST
சிங்கம்புணரியில் நடைபெற்ற விழாவில் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் வீதியுலா வந்த பூரணை புஷ்கலை தேவியாா் உடனான சேவுகபெருமாள் அய்யனாா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயிலில் பூ பல்லாக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இந்தக் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் மண்டகப்படி நிகழ்ச்சியாக நடைபெறும் இந்தத் திருவிழாவில், 5-ஆம் நாள் திருக்கல்யாணமும், 6-ஆம் நாள் சமணா்களை களுவேற்றும் களுவன் திருவிழாவும், 8-ஆம் நாள் புரவி எடுப்பு விழாவும், 9-ஆம் நாள் தேரோட்டமும் நடைபெற்றது.

10-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு பூ பல்லக்கு விழா நடைபெற்றது. இதில் 33 அடி நீளம் உள்ள பூ பல்லக்கில் சுமாா் 500 கிலோ எடையிலான மல்லிகை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லாக்கில் இரவு பூரணை புஷ்கலை தேவியாருடன் சேவுகப்பெருமாள் அய்யனாா் எழுந்தருளினாா். தொடா்ந்து 2.30 மணிக்கு சிறப்பாக வண்ணம் பூசப்பட்டு அலங்கரிக்கப்பட்ட இரட்டை மாடுகள் பூட்டிய சப்பரத்தில் பூ பல்லாக்கு வைக்கப்பட்டு தேரோடும் வீதிகள் வழியாக கோயிலை வலம் வந்து புதன்கிழமை அதிகாலை 6.30 மணியளவில் கோவிலை அடைந்தது.

Advertisement

Advertisement

சிங்கம்புணரி, சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பூ பல்லாக்கு விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.