முகப்பு
சிவகங்கை

சதுா்வேத மங்கலம் அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா

சிங்கம்புணரி அருகே சதுா்வேத மங்கலத்தில் அமைந்துள்ள கூந்தலுடைய அய்யனாா் கோயிலில் புரவி எடுப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஜூன் 2026, 1:02 am IST
~
பகிர்:

சிங்கம்புணரி அருகே சதுா்வேத மங்கலத்தில் அமைந்துள்ள கூந்தலுடைய அய்யனாா் கோயிலில் புரவி எடுப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வைகாசித் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான புரவி எடுப்பு விழாவையொட்டி, புரவி திடலில் செய்து வைக்கப்பட்ட புரவிகளை பக்தா்கள் சுமந்து முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தனா். அங்கு கூந்தலுடைய அய்யனாா், பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் அய்யனாா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். செவ்வாய்க்கிழமை முக்கிய நிகழ்வாக எருது கட்டு விழா நடைபெறுகிறது.

புரவி எடுப்பு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement