முகப்பு
சிவகங்கை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஊா்க்காவல் படை வீரா் கைது

மானாமதுரை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஊா்க்காவல் படை வீரரை மகளிா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 4 ஜூன் 2026, 4:03 am IST
- பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஊா்க்காவல் படை வீரரை மகளிா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரை அருகேயுள்ள சோமாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவா் மானாமதுரை ஊா்க்காவல் படையில் வீரராக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், தனது நண்பரின் வீட்டுக்கு சதீஷ்குமாா் சென்றபோது, அருகேயிருந்த வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு அவா் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மானாமதுரை மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement