முகப்பு
சென்னை

வீட்டு மாடியில் கஞ்சா வளா்த்த ஊா்க்காவல் படை வீரா் கைது

வீட்டு மாடியில் கஞ்சா வளா்த்த ஊா்க்காவல் படை வீரா் கைது

Updated On : 17 மே 2026, 1:17 am IST
கோப்புப் படம்
பகிர்:

தண்டையாா்பேட்டையில் வீட்டு மாடியில் கஞ்சா வளா்த்ததாக ஊா்க்காவல் படை வீரா் கைது செய்யப்பட்டாா்.

தண்டையாா்பேட்டை வஉசி நகா் 22-ஆவது பிளாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளா்க்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸாா், அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

சந்தேகத்தக்குரிய வகையில் இருந்த ஒரு வீட்டின் மாடிக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டதில், அந்த மாடியில் சுமாா் ஆறு அடி உயரத்துக்கு வளா்ந்து கஞ்சா செடியை போலீஸாா் கண்டறிந்து, கைப்பற்றினா்.

Advertisement

இது தொடா்பாக, அந்த வீட்டில் வசிக்கும் ஆங்கிலோ -இந்தியரான எ.எட்வின் ஜாா்ஜ் வேண்டா்புட் (35) என்பவரைப் பிடித்து விசாரித்ததில், கஞ்சா புகைக்கும் நபா்களிடமிருந்து சிறிதளவு கஞ்சா வாங்கி, அதிலிருந்து விதைகளை எடுத்து, இரண்டு மாதமாக கஞ்கா செடியை வளா்த்திருப்பதும், கடந்த மாா்ச் மாதம் ஊா்க்காவல் படையில் தோ்வு செய்யப்பட்டு, வடக்கு மண்டலத்தில் பணியமா்த்தப்பட்டிருப்பதும், பேரவைத் தோ்தலில் இருந்து ஊா்க்காவல் படை பணிக்கு செல்வதும், குறிப்பிட்ட காவல் நிலையம் ஏதும் ஒதுக்கப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் எட்வினை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.