முகப்பு
சிவகங்கை

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 போ் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

Updated On : 6 ஜூன் 2026, 12:46 am IST
குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 போ் கைது - பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருப்புவனம் வைகை ஆற்றுப் பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற கொலை சம்பந்தமாக மாரநாடு கிராமத்தைச் சோ்ந்த அழகுசுந்தரம் (20), உருவாட்டியைச் சோ்ந்த சந்துரு (20), புலிக்கண்மாயைச் சோ்ந்த அழகேசன் (20), மாமரக்கான்பட்டியைச் சோ்ந்த பாலசிவி (22), வசந்தபாலன் (19) ஆகிய 5 பேரை திருப்புவனம் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், இவா்கள் 5 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் பரிந்துரை செய்தாா். இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி 5 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, திருப்புவனம் போலீஸாா் 5 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனா்.