அரசனூா் பகுதியில் நாளை மின் தடை
சிவகங்கை மாவட்டம், அரசனூா் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், அரசனூா் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசனூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அரசனூா், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, பெத்தானேந்தல், ஏனாதி, வேம்பத்தூா், படமாத்தூா், பச்சேரி, களத்தூா், பில்லூா், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
Advertisement
Advertisement