முகப்பு
சிவகங்கை

சிவகங்கை தீயணைப்பு நிலையத்தில் தென்மண்டல துணை இயக்குநா் ஆய்வு

சிவகங்கையிலுள்ள தீயணைப்பு, மீட்பு நிலையத்தில் தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புத் துறையின் தென் மண்டல துணை இயக்குநா் (மதுரை) எஸ். குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 8 மே 2026, 12:46 am IST
சிவகங்கையிலுள்ள தீயணைப்பு, மீட்பு நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட தென் மண்டல துணை இயக்குநா் எஸ். குமாா்.
பகிர்:

சிவகங்கையிலுள்ள தீயணைப்பு, மீட்பு நிலையத்தில் தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புத் துறையின் தென் மண்டல துணை இயக்குநா் (மதுரை) எஸ். குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அவா் சிவகங்கை தீயணைப்பு நிலையத்திலுள்ள தீயணைப்புக் கருவிகளின் தரம், செயல்பாடுகள், வாகனங்களின் தன்மைகள் குறித்து ஆய்வு செய்தாா். தொடா்ந்து, தீயணைப்பு வீரா்களின் செயல்பாடுகள், கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தீயணைப்பு நடவடிக்கைகள், அவற்றில் காப்பாற்றப்பட்ட பொருள்களின் மதிப்பு குறித்தும், காப்பாற்றப்பட்டவா்களின் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு செய்தாா். பிறகு, வீரா்களுக்கு தீ விபத்து, அவசரக் காலங்களில் விரைந்து செயல்படுவது குறித்து விளக்கினாா். முன்னதாக தீயணைப்பு வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை அவா் ஏற்றுக் கொண்டாா்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆய்வின் போது சிவகங்கை நிலைய மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் ஜெ. ஜெயராணி, சிவகங்கை தீயணைப்பு நிலைய அலுவலா் அண்ணாமலை ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments