பைக் மோதி முதியவர் சாவு
பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த தன்னாசி (60) மற்றும் இவரது மகன் தாமரைச்செல்வன்
பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த தன்னாசி (60) மற்றும் இவரது மகன் தாமரைச்செல்வன் ஆகிய இருவரும், ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் கள்ளிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த தன்னாசி, தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். இது குறித்து தென்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.