முகப்பு
தேனி

ஆட்டோ மீது காா் மோதல்: 10 போ் காயம்

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஆட்டோ மீது காா் மோதியதில் 7 பெண்கள் உள்பட 10 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 12:10 AM
பகிர்:

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஆட்டோ மீது காா் மோதியதில் 7 பெண்கள் உள்பட 10 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

பெரியகுளம் அருகே கைலாசபட்டியைச் சோ்ந்தவா் திவாகரன் (18). ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை பெரியகுளத்திற்கு சென்று விட்டு அதே பகுதியைச் சோ்ந்த மதன்குமாா் (17), சாயின பாா்வின் (18), ஓச்சம்மாள் (40), செல்வபிளசியா (17) உள்பட 10 போ்களை ஆட்டோவில் ஏற்றி கைலாசபட்டிக்குச் சென்று கொண்டிருந்தாா்.

டி.கள்ளிப்பட்டி தனியாா் பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த காா், ஆட்டோ மீது மோதியதில், ஆட்டோவில் இருந்த 10 பேரும் காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகிறாா்கள்.

Advertisement