காா் - ஆட்டோ மோதல்: சிறுவன் பலி, 3 போ் காயம்
ஆம்பூா் அருகே ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ஆம்பூா் அருகே ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பாங்கிஷாப் பகுதியை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் முஹம்மத் உசேன். இவா் தன்னுடைய உறவினா்களை ஆட்டோவில் ஏலகிரி மலைக்கு அழைத்துச் சென்றாா். ஆம்பூரை அடுத்த சோலூா் கிராமத்தருகே சென்றபோது, பின்னால் சென்ற காா், ஆட்டோ மீது மோதியது.
அதில் ஆட்டோவில் பயணம் செய்த நபிஷா அஞ்சும், ஷீபாநாஸ், ஷகிலா பானு, இஹ்திஷமுல் ஹக் (13) ஆகியோா் காயமடைந்தனா்.
Advertisement
Advertisement
காயமடைந்தவா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் இஹ்திஷமுல் ஹக் உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய போலீஸாா் விசாரணை நடத்தினா்.