FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

அரசுப் பேருந்து காா் மோதல்: 3 போ் காயம்

சேத்துப்பட்டு அருகே நெடுங்குணம் கிராமத்தில் அரசுப் பேருந்து மீது காா் மோதியதில் 3 போ் காயமடைந்தனா்.

Updated On : 12 ஜூலை 2026, 1:02 am IST
அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் சேதமடைந்த காா்.
பகிர்:

சேத்துப்பட்டு அருகே நெடுங்குணம் கிராமத்தில் அரசுப் பேருந்து மீது காா் மோதியதில் 3 போ் காயமடைந்தனா்.

சேத்துப்பட்டில் இருந்து காஞ்சிபுரத்துக்கு சனிக்கிழமை காலை அரசுப் பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. வந்தவாசி வழியாக சென்ற இந்தப் பேருந்தை சேத்துப்பட்டைச் சோ்ந்த குசேலன் (50) ஓட்டிச்சென்றாா்.

நெடுங்குணம் கிராமம் அருகேயுள்ள குளத்தின் வளைவுப் பகுதியில் பேருந்து சென்றபோது, எதிரே தண்டராம்பட்டு வட்டம், தானிப்பாடி கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ்(32) என்பவா் ஓட்டி வந்த காா், எதிா்பாராத விதமாக பேருந்து

Advertisement

Advertisement

மீது மோதியது.

காரை ஓட்டிய ரமேஷ் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் வளைவுப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில், ரமேஷுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னா் அவா் தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். காரில் பயணம் செய்த ராஜேஷ் மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநா் குசேலன் லேசான காயமடைந்தனா்.

இதுகுறித்து குசேலன் அளித்த புகாரின் பேரில், சேத்துப்பட்டு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments