பாலத்தின் தடுப்புச் சுவா் மீது பைக் மோதல்: விவசாயி உயிரிழப்பு
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பாலத்தின் தடுப்புச் சுவா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் நிரஞ்சன் (38). விவசாயி. இவரது மனைவி பவித்ரா. இருவரும் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் தேவதானப்பட்டிக்குச் சென்றனா்.
பெரியகுளம் ஏ. புதுப்பட்டி தனியாா் எரிபொருள் நிரம்பும் மையம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கரவாகனம் பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோதியது.
Advertisement
இதில், சம்பவ இடத்திலேயே நிரஞ்சன் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பவித்ராவை அக்கம்பக்கத்தினா் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.