முகப்பு
தேனி

தேவாரம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது

Updated On : 6 ஜூலை 2026, 11:18 pm IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தேவாரம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேவாரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தேவாரம் காவல் நிலைய போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் தேவாரம் அரசு மதுக்கடை அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த இரண்டு பேரைப் பிடித்து விசாரித்த போது, இருவரும் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவா்களிடமிருந்து கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, கோம்பையைச் சோ்ந்த செல்வா (24), பண்ணைப்புரத்தைச் சோ்ந்த அசோக் (28) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments